காந்தி மகாத்மா அல்ல ..........

>> Monday, December 20, 2010



"புரட்சிக்கு அதிருப்தி மட்டுமே காரணமாக இருந்து விட முடியாது மாறாக நியாயத்தின்  மீது செம்மையான நம்பிக்கையும் , அரசியல் மற்றும் சமுக உரிமைகள் குறித்த தேவையையும் அதன் முக்கியதுவத்தையும் நாம்  உணர்ந்து இருக்க வேண்டும்"  என்று முழங்கியதோடு மட்டும் நின்று விடாமல் தன்னுடைய போராட்டங்களுக்கு சமுகத்தில் உள்ள  ஏற்ற தாழ்வு தான் காரணம்  என்று நிருபித்து காட்டியவர் புரட்சியாளர் அம்பேத்கர் . தன் வாழ் நாளில் அவர் பேசிய பேச்சுகளோ , எழுத்துகளோ எந்த வகையிலும் சாதிய உணர்வையோ , சாதிய மோதலையோ தூண்டும் விதத்தில் அமைந்துள்ளது என்று எவராலும் எப்படி சுட்டி காட்ட முடியாதோ, அதே போல  அவரின் களப்பணி என்பது சாதியத்திற்கு எதிரானது  என்பதை நாம் மறக்க முடியாது . அவர்  இந்தியாவின் சமுக தளத்திலும் , தத்துவ தளத்திலும் , பண்பாட்டு தளத்திலும் குறிப்பாக அரசியல் தளத்திலும் ஏற்படுத்திய எழுச்சியின்  விளைவுகளை பொருத்து  கொள்ள முடியாதவர்கள் அம்பேத்கருக்கு சாதி தலைவர் என்றும்  காந்திக்கு எதிரானவர் என்றும் சொல்லி வருகின்றார்கள் .

நாங்கள் தாழ்த்தபட்டவர்கள் எங்களுக்கு உணவு கொடுங்கள் , உடை கொடுங்கள் , தங்க இடம் கொடுங்கள் என்று அம்பேத்கர் கேட்டு இருந்தால் இன்றைக்கு அவரை எல்லா தரப்பு மக்களும் ஏற்று கொண்டு இருப்பார்கள் ஆனால் சமுகத்தில் பிறப்பால் தாழ்த்தபட்டவன் என்கின்ற பழி , வாழ்வதற்கு சேரி என்னும் சிறை , பொது இடத்திற்கு நுழைய தடை ,பொருளாதார நிலையை பொறுத்தவரை ஆண்டைகளுக்கு அடிமை , இந்த இழிவு நிலையை விட்டு வெளியேற எங்களுக்கு அரசியல் அதிகாரம் வேண்டும் என்று போராடியதால் அம்பேத்கரை இன்றைக்கும் சாதி பிரியர்கள் ஏற்று கொள்ள தயாராக இல்லை . அம்பேத்கர் சமுக தளத்தில் சாதியை எதிர்த்தார் , தத்துவத தளத்தில் மதங்களையும் , கடவுளையும் எதிர்த்தார்  , பண்பாட்டு தளத்தில் நான் இந்து அல்ல என்பதை நிருபிக்க பௌத்தத்தை தழுவினார் .இப்படி அம்பேத்கர் செய்தது அனைத்துமே ஒரு குறிப்பட்ட சமுகத்தின் விடுதலைகாக தான் என்று பலரும் நினைத்து  கொண்டு இருகின்றார்கள் . ஆனால் ஒடுக்கபட்டோரின் வடுதலை என்பது ஒரு நாட்டின் விடுதலை என்பதை காந்தி உட்பட யாரும் புரிந்து கொள்ள வில்லை. காந்தியாருக்கு அம்பேத்கரோடு ஏற்பட்ட முரண்பாடு என்பது அவர் ஒடுக்க பட்ட மக்களின் உரிமைக்காக போராடுகிறார் 
என்பது அல்ல , அந்த போராட்டம்  இந்து மதத்திற்கு  எதிரானது என்பது மட்டுமே .


 இந்தியாவின் விடுதலை விரும்பிய காந்தியார் அம்பேத்கரின் இலக்காண ஒடுக்க பட்ட மக்களின் விடுதலையை விரும்பாதது ஏன் ? இன்னும் சொல்ல போனால் எங்கே அந்த விடுதலை அம்பேத்கர் தலைமையில் ஒடுக்கப்பட்ட மக்கள் பெற்று விடுவார்களோ என்கின்ற அச்சத்தில் அவரின் எல்லா கோரிக்கைக்கும் எதிர் கருத்தை பதிவு செய்ததோடு மட்டும் அல்லாமல் உண்ணா நிலை போராட்டம் என்று அச்சுறுத்த  தவறியது இல்லை . உலகத்தின் பார்வையில் இவர் அகிம்சை விரும்பும் தலைவர் என்கின்ற பெயரையும் சுலபமாக பெற்றார் . ஏதோ அம்பேத்கர் என்ற தலைவர் கையில் ஆயுதம் ஏந்தியதை போல இன்றைக்கும் உலகத்தில் உள்ள எல்லா தலைவர்களும் காந்தியை மகாத்மா என்று அவர்களுக்கு தெரிந்ததை சொல்லி வருகின்றார்கள் .

ஆனால் அம்பேத்கர் காந்தியாரை மகாத்மா என்று ஏன் தன்  வாழ்நாளில் ஒரு முறை கூட அழைத்தது  இல்லை என்று தெளிவு படுத்துகின்றார் , 1955 ஆம் ஆண்டு, டிசம்பர் 31 அன்று B.B.C.க்கு அளித்த சிறப்பு பேட்டி இதோ 






அம்பேத்கர் என்னும் ஒரு தேச தலைவர் இந்தியாவின் இதய துடிப்பான அரசியல் அமைப்பு சட்டத்தை இயற்றி இருந்தாலும் ,  ஒடுக்க பட்ட மக்களுக்கு குரல் கொடுத்தார் என்கின்ற ஒரு காரணத்தினாலேயே சாதி பிரியர்களின் பார்வையில் அம்பேத்கர்  சாதி தலைவராகிவிட்டார் , காந்தி தேச தந்தை ஆகிவிட்டார் , அதனால் தான் இன்றைக்கும் சிறைபடுதபட்ட அம்பேத்கர் சிலைகள் இந்தியாவில் அதிகம் இருக்கிறது . 


சேரிகளே ,
தேர்தல் நெருங்குகிறது ....
நம் குடிசை எரித்த  கும்பல் ஓட்டு கேட்டு வரும் 
அம்பேத்கர் பெயரையும் சொல்லி கொண்டு வரும் 
தயாராக இருங்கள்
 வரவேற்க அல்ல .... விரட்டி அடிக்க !! 

- தமிழரின் குரல் 

0 comments:

Post a Comment

copy right  © தமிழரின்குரல்- தமிழனின்குரல்

Back to TOP